Related Articles

2 Comments

  1. 1

    Sankar

    அய்யா உங்களது அபிமானி மற்றும் ரௌத்திரம் சந்தாதாரர் நான். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டன். உங்கள் மீது பெருமதிப்பு கொண்ட எனக்கு, உங்களது நிலைப்பாடு வருத்தம் அழிகிறது.

    தேச ஒற்றுமை எல்லாவற்றிலும் பெரியது. பிர்வினைவாத சக்திகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இப்படி தலைவர் காமராஜர் தொடர்ந்து பேசி இருக்கிறார் என்பது நீங்கள் அறியாதது அல்ல.

    இந்த திருமுருகன் காந்தி என்பவர் யார்? எத்தகைய வெறுப்பு கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதை அவரது facebook பக்கத்தை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். . “எனது நாடு தமிழ் நாடு. இந்திய நாயே வெளியேறு” என்பது அவரது முழக்கங்களில் நாகரீகமான ஒரு முழக்கம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். இதே போன்ற ஒரு சொற்றொடரை வட இந்தியாவில் இருக்கும் நம் தமிழ் இனத்தவரை பற்றி யாரோ சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? உங்களது அறிக்கையில் திருமுருகனின் செயல்பாடுகளைபற்றி ஒரு வரி கூட இல்லையே?

    அவர் அரசால் தடை செய்யப்பட்ட மெரினாவில் அனுமதி இன்றி ஏன் போராட்டம் நடத்த வேண்டும்? முறையான அனுமதி பெற்று , வழக்கம் போல வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் நடத்தாமல் மெரினாவில் நடத்திய முயல்வது உள் நோக்கம் கொண்டது.

    இவர் போன்ற மனிதர்களின்வெ றுப்பு பிரசாரங்களின் நோக்கமே , ஒரு மற்ற மாநிலதவரிடம் இருந்து வினையை தூண்டி , அதை வைத்து பரப்புரை செய்து, தாய்த் திரு நாட்டில் இருந்து தமிழகத்தை தனிமைப் படுத்துவது தான். இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை எதிர்ப்பது என்பது, நாம் ஆராதிக்கும் மகாகவி பாரதி, பெருந்தலைவர் போன்றோரின் கனவை சிதைக்கும் .

    .இது போன்ற சக்திகள் தமிழ் மக்கள் உணர்ச்சியை 60களில் தூண்டியதின் விளைவு தான் நமது மாநிலத்தின் 50 ஆண்டு கால அவல நிலைக்கும் காரணம். , நீங்கள் இதற்கு வக்காலத்து வாங்கக் கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்

    Reply
    1. 1.1

      gmiyouthwing@gmail.com

      இந்திய இறையாண்மைக்குள் இருந்து கொண்டே மாநில நலன்களில் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே நம் நிலைப்பாடு, தடையை மீறி செயல்பட்டார்
      என்றாலும், திருமுருகன் காந்தியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது அவருக்கு எதிரான அடக்குமுறையாக மட்டும் நாம் நினைக்கவில்லை. வீதிக்கு வெளியே வந்து அறநெறியில் போராடுபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நாம் பார்க்கிறோம். திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது அணுகுமுறைகள் அத்தனைக்கும் நாம் ஆதரவு அளித்ததாகக் கருத வேண்டியதில்லை.

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2016, Gandhiya Makkal Iyakkam. All rights reserved.
Registered Office: Thalaivar - Tamilaruvi Maniyan , Gandhiya Makkal Iyakkam, 32,Thiruvengadam street, (E V R Periyar salai – Near Golden Tower Hotel) , Periamedu, Chennai 600 003, India.
காந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.