சென்னை, ஜூன் 27: காந்திய மக்கள் இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கு கோரி கோடி கையெழுத்து இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை சென்னை பெரியமேட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன், கட்சியின் தலைவர் தீரன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.