`நான் ஈட்டும் செல்வத்தில் சிறிதளவாவது சமூக நலனுக்குச் சமர்ப்பணம் செய்வேன்! நான் கற்ற கல்வியால் பெற்றிருக்கும் அறிவை அடுத்தவர்தம் அறியாமை அகற்றப் பயன்படுத்துவேன்! என் உடல் வலிமையால் சகமனிதர்களின் துயர் துடைக்க உழைப்பேன்! சிதறிக்கிடக்கும் நல்லவர்களை ஓரணியில் சேர்ந்து நிற்கச் செய்வேன்! சுற்றுப்புறத்தைச் சுத்தமாக்குவேன்! அனாதைகளை அரவணைப்பேன்! அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் உரியவர்க்கு ஒழுங்காய் சேரும் வழிவகை காண்பேன்! மக்களுக்குத் தீங்கு தரும் செயல்களைச் செய்பவர் யாராயினும் காந்திய வழியில், சாத்விக நெறியில் எதிர்த்து நின்று, நன்மையைத் தேடித் தருவேன்! ஊழலற்ற, சமத்துவம் சார்ந்த புதிய சமுதாயத்தை நான் வாழும் மண்ணில் உருவாக்க என்னால் இயன்றளவு தூய்மையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்! தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை என்ற உண்மையை அறிவேன்! என்ற உறுதியோடு நிற்பவரா நீங்கள்?
உங்களுக்காக இருப்பதுதான் காந்திய மக்கள் இயக்கம் !